இந்தியாவின் வட மாநிலங்களில் கடந்த சில வாரங்காளக நில நடுக்கங்கள் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் நிலையில் ராஜஸ்தான், மேகாலயா மாநிலங்களில் இன்று அதிகாலை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானிர் பகுதியில் இன்று (ஜூலை-21) அதிகாலை 5.24 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானது என இந்திய தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று அதிகாலை மேகாலயாவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.